• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேரடி விவாதத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தயார்

இலங்கை

”ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருடனும் நேரடி விவாதத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவே உள்ளார்” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருடனும் நேரடி விவாதத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவே உள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எமது வேலைத்திட்டங்கள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றன. ஆனால் தேசிய மக்கள் சக்தியிடம் எவ்வாறான திட்டங்கள் உள்ளது என்பதை அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரகுழு தேசியமக்கள் சக்தியின் பொருளாதார குழுவுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply