• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீழ்ச்சிப்பாதையில் இருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது

இலங்கை

”நாம் நாட்டை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துள்ளோம். வீழ்ச்சிப்பாதையில் இருந்து நாடு இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் நாட்டை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துள்ளோம். வீழ்ச்சிப்பாதையில் இருந்து நாடு இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்திக்கான கொள்கைத் திட்டங்களே எமது நோக்கமாகும். அதனாலேயே ஒரு சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிட்டது.

நாடு தொடர்பாக சிந்தித்தே நாம் அவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டோம். மக்கள் இன்று அதனை புரிந்து கொண்டுள்ளனர்.

அதனை விடுத்து பேரணிகளை முன்னெடுத்தல் மற்றும் அரசியல் விவாதங்களை நடத்துவதன் ஊடாக எதனையும் சாதித்துவிட முடியாது. அதனுடாக மக்களின் ஆணையையும் பெற முடியாது” இவ்வாறு மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply