• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

இலங்கை

தமிழ் – சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை மாத்திரம் எதிர்வரும் 11ஆம் திகதி பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பார்வையிட வரும் நகர் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply