• Welcome to TamilsGuide
செய்திகள் 1

SLPPஅரசியல் சபை உறுப்பினர்களுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 6 உறுப்பினர்கள் தொடர்பாக, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply