• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழு ஒன்றின் பிடியில் உள்ள பகுதியில் 56 இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு குற்றச்செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 8 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்து ஊடாக இந்த நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply