• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொஷான் ரணசிங்க தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

இலங்கை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பித்ராஞ்சலி என்ற சட்டத்தரணி சமர்ப்பித்ததுடன், பிரதிவாதியாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply