• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி

இலங்கை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி, பேராசிரியர் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடகேவா, கே.பி.எஸ்.குமாரசிறி, உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இதில் இணைந்துள்ளனர்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply