ஜேர்மன் மாகாணமொன்றில் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் இறங்கிய போலீசார்
ஜேர்மன் மாகாணமொன்றில், தங்களுக்கு அரசு போதுமான சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொலிசார் pant அணியாமல் பணிக்கு வந்துள்ளார்கள். ஜேர்மன் மாகாணமான பவேரியாவில், தங்களுக்கு போதுமான சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொலிசார் pant அணியாமல் பணிக்கு வந்துள்ளார்கள்.
அது தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், யூடியூப் வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர், பொலிஸ் துறையில் சீருடை பற்றாக்குறை பிரச்சினை இருப்பது உண்மைதான் என்றும், சீருடை வழங்கலில் உள்ள பிரச்சினை பெரிய தொந்தரவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.