• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸ் அதிரடிப்  படையினர்  கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்  படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்ட  மாடுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply