• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் புற்றுநோயால் ஊடகவியலாளர் உயிரிழப்பு

இலங்கை

யாழில் புற்றுநோய் காரணமாக இளம் ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த நடேசு ஜெயபானுஜன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே நேற்று  வீட்டில் திடீரென மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மகன் உயிரிழந்த தகவலை அறிந்து அவரது தாயாரும்  தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply