• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காத்தான் குடியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இலங்கை

காத்தான் குடியில் ஏராளமான போதைப்பொருட்களுடன் 35 வயதான நபரொருவர்  நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply