• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறீதரன் செய்த பெறும் தவறால் எழுந்துள்ள புதிய சிக்கல்

இலங்கை

சுமந்திரன், சிறீதரனின் கடிதம் தொடர்பில் எனக்கு அக்கறை கிடையாது. அது அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சினை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நான் உடனடியாக தெரிவு செய்யப்பட்ட மத்திய செயற்குழுவுடன் சென்று பதவியேறுங்கள் என்று சிறீதரனுக்கு சொன்னேன்.

தமிழரசுக் கட்சி இப்போது இக்கட்டான நிலையில் தான் இருக்கிறது என்பது யதார்த்தம். தமிழ் மக்களின் அடையாளமாக பார்க்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழரசுக்கட்சி. கட்சியை பணயம் வைத்து சில செயற்பாடுகள் நடக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply