• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் கணவரிடம் சென்று 5 மாதங்களில் உயிரிழந்த முல்லைத்தீவு குடும்பப் பெண்

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் முல்லைத்தீவில் இருந்து பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 

Leave a Reply