• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் யுவதிகளுடன் சிக்கிய ஆண்கள்; 500 ரூபா முதல் 10000 வரை கட்டணமாம்

இலங்கை

யாழில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

சுழிபுரம், சங்கானை, கிளிநொச்சி பகுதிகளிலிருந்து யுவதிகள் அங்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது .

இதன்போது ரூ.500 தொடக்கம் ரூ.10000 வரை கட்டணம் அறவிடும் யுவதிகள் அங்கு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்ளனர்.

அதோடு அந்த வீட்டுக்கு வந்து, யுவதிகளை தெரிவு செய்து அழைத்துக் கொண்டு சென்று, யாழ் நகர விடுதிகளில் உல்லாசமாக இருக்கும் சேவையும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

நாளாந்தம் 20 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று பொலிசார் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   
 

Leave a Reply