• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நன்றி தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

இலங்கை

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டினை மீட்பதற்கு, சிறிய செயற்திட்டங்கள் கூட பாரியளவிலான பங்களிப்பினை வழங்கும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வட மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”போலியோ தடுப்பு மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டசிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கின்றது.

வசதிகள் இல்லாத மாணவர்கள் பாடசாலை கல்வியை தவிர்த்து வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் கற்றல் வசதிகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு ரோட்டரி கழகம் உதவ முன்வந்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு நன்றிகள், கல்வியால் முழு சமூக கட்டமைப்பையும் மாற்ற முடியும்” இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் வட முனையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை உள்ளதாகவும் அதற்கான சிறிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்  எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Reply