• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலவி வரும் வெப்பநிலை குறித்து முக்கிய அறிவிப்பு

இலங்கை

நாட்டில் நிலவி வரும் வெப்பநிலையானது இன்று மேலும் உயர்வடையக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மன்னார், இரத்தினபுரி மொனராகலை, மற்றும் வவுனியா மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானத்திற்குரிய மட்டத்தில் காணப்படும் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள்  போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல் வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல்  உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply