• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியிடம் மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் கையளிப்பு

இலங்கை

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதியும் மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட மக்கள் போராட்டத்தின் எதிரொலி என்ற நூல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த நூலானது  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply