• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் 996 நபர்கள் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 940 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 56 சந்தேக நபர்கள் என மொத்தம் 996 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 301 கிராம் 434 மில்லி கிராம் ஹெராயின்,500 கிராம் ஐஸ் 296 மி.கி, கஞ்சா 13 கிலோ 963 கிராம், 2,806 கஞ்சா செடிகள், மாவா 2 கிலோ 347 கிராம், 3,216 மாத்திரைகள், துல் 16 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
 

Leave a Reply