• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படத்தை தாங்கிப் பிடித்த இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது காலா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் பேசப்பட்டவர் நடிகை ஈஸ்வரி ராவ். இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக 3 பிள்ளைகளுக்கு தாயாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

1990 ஆம் ஆண்டு இவர் அறிமுகமான திரைப்படம் தான் கவிதை பாடும் அலைகள். இந்த திரைப்படத்தில் இவரும்,

ஜெயக்குமார் என்ற புதுமுக நடிகர் உள்ளிட்ட பெரும்பாலான புதுமுகங்களும் நடித்திருந்தனர். இந்த கவிதை பாடும் அலைகள் படத்தை அப்போது பிரபலமாக இருந்த மறைந்த இயக்குனர் டி.கே போஸ் அவர்கள் இயக்கினார். 

குறிப்பாக இந்த படத்தின் கதை பெரிதாக சொல்லி கொள்ளும்படி இருக்காது. இதில் நடித்த நடிகர் நடிகைகளும் புதுமுகங்களாக இருந்தனர். அந்த வகையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் படத்தை கையில் தாங்கியது இளையராஜாவின் பாடல்கள் தான் என்பது பலருக்கும் தெரியும். 

இந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜா இசையில் வந்த ராசா என் ராசாக்கண்ணு,, வானிலா தேனிலா ஆசை பூ நிலா, சாமிய வேண்டிக்கிட்டு, உன்னை காணாத நாள் ஏது, காற்றும் பூவும் போன்ற அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. 

இந்த படத்தை நாளிதழ் மூலமாக விளம்பரப்படுத்தும் போது படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்டுடன் அந்த பாடலின் தலைப்புடன் தான் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply