• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் 1071 நபர்கள் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1071 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 986 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 85 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1071 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் 1 கிலோ 785கிராம், பனி 261 கிராம் 104 மி.கி, கஞ்சா 14 கிலோ 606 கிராம், மாவா 104 கிராம் 500 மி.கி, துலே 14,144 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 986 சந்தேக நபர்களில் 107 சந்தேகநபர்கள் பிடியாணை அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போதைக்கு அடிமையான 42 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply