• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு - இளைஞர் உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொன்னாலை கடற்படை முகாம் முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைநகரில் இருந்து பொன்னாலையூடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார்.

இதனிடையே வாளுடன் காரில் காரைநகர் நோக்கி பயணித்தவர்கள் அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்

ளார் .

 

இந்நிலையில் கடற்படையினர் எமக்கு பிரச்சினை வரும் வெளியேறுமாறு தம்பதியினரை கலைத்துள்ளனர்.
இந்நிலையில் கடற்படை முகாம் முன்னே இளைஞனை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் வன்முறைக்கும்பல் கடத்தி சென்ற நிலையில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் சந்தேநபர்களால் இறக்கபட்டுள்ளார்.

தொடர்ந்து வைத்தியாலை ஊழியர்கள்  குறித்த நபரை மீட்டு யாழ் போதனாவில் அனுமதித்த பொழுதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதேவேளை மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் முரண்பட்டமையினால் வன்முறைக்கும்பலினால் சித்தன்கேணி பகுதியில் அவரை  இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்நிலையில் அப்பெண் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இது குறித்து  முறைப்பாடு செய்துள்ள   நிலையில் பொலிசார் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்

இதேவேளை வட்டு பொலிஸ் நிலையத்திற்கு யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் விரைந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இணைந்து மேலதிக விசாரணைகள் ஆரப்பிக்கபட்டுள்ளன.

கடந்த வருடம் ஏற்ப்பட்ட வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply