• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் வான் சாகசம் – 2024 கண்காட்சி நிகழ்வுகள்

இலங்கை

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் – 2024 கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (09) நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்.; முற்றவெளி மைதானத்தில் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த கண்காட்சி நிகழ்வான நாளை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய நிகழ்வை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்த நிலையில், இன்றும் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

இதனிடையே, கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு தருமாறு யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனிடம் கோரியுள்ளார்.

இதன்போது குறித்த மாணவினின் விபரங்களை கோரிய இராஜாங்க அமைச்சர், அம் மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply