• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

இலங்கை

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டை முதல் வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையிலான ஒரு பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொம்பனிவீதிய மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலத்தின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணி காரணமாக ரயில்வே நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
 

Leave a Reply