• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்

இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று மன்னாரில் அமைந்துள்ள பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்தியமீனவர்களின் அத்து மீறிய வருகையின் காரணமாக கடல் வளம் சுறண்டப்படுவதினால் எமது மீனவர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன் நின்று குரல் கொடுத்து வருகிறோம்.

இலங்கை கடற்பரப்பினுல் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் வந்து மீன் வளங்களை அழிப்பதோடு,மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது. இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம் பெறுகின்றது.

மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மற்ற அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது. கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply