• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

இலங்கை

யாழ், சுழிபுரம் பகுதியிலுள்ள  சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும்  அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத்  தோற்றம் பெறலாம் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a Reply