• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் - இருவர் கைது

இலங்கை


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில்  பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட  நபர்களே,அதனைத் தடுக்க வந்த  பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச்செல்ல முயற்சித்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர்  மற்றும்  மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply