• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை

கனடா

கனடா ரொறன்ரோவில் யாழ்.தென்மராட்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட பெண்ணொருவருடன் தவறான உறவை பேணிய 43 வயதான  நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரியைச் சொந்த இடமாகக் கொண்ட நபர் தனது மனைவியை தாக்கிக் காயப்படுத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவைப் பேணி வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையான நபரை மனைவி பல தடவைகள் கண்டித்துள்ளார்.

ரொறன்ரோவில் உள்ள சிலரால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் ஒன்றின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக பல தடவைகள் ஒன்று கூடல் நடந்துள்ளது.

அந்த ஒன்று கூடலின் போதே யாழ்ப்பாண பெண்ணின் தொடர்பு அந்த நபருக்கு கிடைத்துள்ளது. இதனை மோப்பம் பிடித்து அறிந்த அவரின் மனைவி, பல தடவைகள் கணவனிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன் குறித்த நபர் மனைவி மீது நடத்திய தாக்குதலில் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்தால் தொடர்ச்சியான உபாதைகளுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலைக்கு சென்ற போது நடத்தப்பட்ட விசாரணையின் போதே கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.

சுகுமார் தற்போது பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply