• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வருகை

இலங்கை

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற  சிவராத்திரி நிகழ்வில், தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கிவைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில்  ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள்  மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்வரும்  08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply