• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் நாம் தயார்- பசில் ராஜபக்ஷ

இலங்கை

நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இன்று (செவ்வாய்கிழமை) விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்

இதேவேளை இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டும், ஆனால் மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான் மாற்றம் செய்கிறேன், என்றும் கட்சிக்காக நான் கடினமாக உழைக்கிறேன்.

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் நான் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வேன்.எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் எமது கட்சியின் ஆதரவுடன்தான் வருவார் என அவர் தெரிவித்தார்

அத்துடன் மக்களை ஒருபோதும் நாங்கள் ஏமாற்றியதில்லை. சில இடங்களில் மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சொல்வதை மக்கள் ஏற்கவில்லை என்றும் எதற்கும் நாங்கள் தயார்’எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பசில் ராஜபக்ஷவை வரவேற்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply