• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான காலம் நீடிப்பு

இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் ஏலத்திற்கான அழைப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டவிருந்ததுடன் விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
 

Leave a Reply