• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு

இலங்கை

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.

அத்துடன், இச்சந்திப்பின்போது பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply