கனடா- ஸ்காபுறோ நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்றத்தில் விசேட பூசைகள்
கனடா
கனடா- ஸ்காபுறோ நகரில் நாஸ்டின் வீதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குருமன்றத்தில் கடந்த மாசி மக திருநாளில் இடம்பெற்ற விசேட பூசைகள் மற்றும் வழிபாடுகள் மற்றும் அபிராபி அந்தாதி பதிகம் பாடல் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.
பல சக்திகள் உருக்கத்துடன் கலந்து கொண்ட இந்த திருநாளில் அன்றைய தினம் அபிராமி அந்தாதி பதிகத்தின் பாடல்களை பக்தி ததும்ப உருகிப் பாடிய நன்கு அறியப்பெற்ற பக்தி பாடகர் மற்றும் ஓதுவார் திரு விக்னேஸ்வரன் (யாக்கோப்) அவர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
குருமன்றத்தின் நிறுவனரும் சக்தியுமாகிய ஞானம்மா திருநாவுக்கரசு அவர்கள் பொன்னாடை மற்றும் பிரசாதம் ஆகியவை வழங்கிக் கௌரவிப்பதை இங்குள்ள படத்தில் காணலாம்