• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தக பைக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி

இலங்கை

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21) பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனையின் போது புத்தகப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கருவியை கண்டுபிடித்து இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறித்த உபகரணங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply