• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹட்டனில் மாபெரும் சமாதானப் பெருவிழா

இலங்கை

மலையக மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழாவொன்று ஹட்டன் டன்பார்வீதியில் உள்ள டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் கண்ணீரோடும், கவலையோடும் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் தமது குடும்பத்துடன்  வந்து தேவனுடைய விடுதலையை பெற்றுக்கொள்ளுமாறு    முகத்துவாரம் மிஷ்பா ஜெப மிஷனரி  ஆலயத்தின் தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்பெருவிழாவில் கலந்துகொள்ள விரும்புவோர்களுக்கு  சகல அனுமதிகளையும் பெற்றுக் கொடுத்து  அவர்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply