• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரம்மாண்டமாக நடைபெற்ற பாடுவோர் பாடலாம்

இலங்கை

ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய ”பாடுவோர் பாடலாம்” என்ற போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த 17ஆம் திகதி ஹட்டன் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டங்களாக இடம்பெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில் 50 பாடக பாடகிகள் பங்குபற்றினர். இப்போட்டியின் நடுவராக இசைபுயல் A.R.ரஹ்மானின் சகோதரியான A.R. ரைஹானா கலந்துகொண்டார்.

12 மணிநேரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலாமிடத்தை தினுசிகா என்ற யுவதி பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தை டிரோசன் பெற்றுக்கொள்ள மூன்றாமிடத்தை சன்ஜய் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply