• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிணற்றில் அடையாளம் தெரியாத சிசுவின் உடல் மீட்பு

இலங்கை

ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலகெதர பொலிஸ் பகுதியல் வீடொன்றின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து இனந்தெரியாத சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் மோட்டரை ஆன் செய்யும் முன் கிணற்றை சோதித்த வீட்டின் உரிமையாளர் தண்ணீரில் பொம்மை ஒன்று மிதப்பதைக் கண்டு அதை அகற்ற மரக்கட்டையை நகர்த்தி பார்த்தபோதே குறித்த சிசுவை அடையாளம் கண்டுள்ளார்.

பின்னர், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன், குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு நீதவானின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply