• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதாள உலகக் குழு உறுப்பினர் பியும் ஹஸ்திகா தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு

இலங்கை

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘”பியும் ஹஸ்திகா” வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளரான பியும் ஹஸ்திகா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply