• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் இருந்து இந்தியாவிற்கு மற்றுமொரு விமானசேவை

இலங்கை

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டதோடு, அதற்கான ஒரு முதலீட்டாளரை விலைமனு சபை தெரிவு செய்துள்ளது.

குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

இதற்கான உடன்பாடு அடுத்த வாரம் எட்டப்படலாம் எனவும் அதன் மூலம் மத்தள விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும் எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply