• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறந்துபோய் இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக கண்டெக்கப்பட்ட பிரபல இயக்குனர்

சினிமா

கடந்த 1987ஆம் ஆண்டு வெளிவந்த மிழிஇதழில் கண்ணீருமாய் எனும் திரைப்படத்தில் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரகாஷ் கொலேரி. கேரள மாநிலம் வயநாட்டில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
  
இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த இயக்குனர் பிரகாஷ் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பிரகாஷ் கோலேரிக்கு 65 வயது ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களாக தனது வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு அவருடைய வீட்டு கதவை முதலில் தட்டி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதன்பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். வீட்டின் உள்ளே இயக்குனர் பிரகாஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அவரது உடலை கைப்பற்றி, இது தற்கொலையா அல்லது யாரவது இவரை கொலை செய்துவிட்டார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

மலையாளத்தில் பிரபலமான இயக்குனராக இருந்த பிரகாஷின் மறைவு திரையுலகினர் மதிப்பும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a Reply