• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும்

இலங்கை

”பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது நோக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக” தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும்,  அவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டுமெனவும், அதற்காக ஒரு விசேட செயலணியை உருவாக்குவதற்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும்  இராதாகிருஷ்ணன்  மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply