• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை - யாழ் பொலிஸார் அதிரடி

இலங்கை

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக் கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply