• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது

இலங்கை

72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (புதன்கிழமை) தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை .

அத்துடன் நேற்று சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்..

Leave a Reply