• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்வுக்கு ஒரு குறள் திருக்குறள் என்ற நூல் வெளியீட்டு விழா.!!

இலங்கை

திரு. வி.வின். மகாலிங்கம் ஐயா அவர்களின் “உயர்வுக்கு ஒரு குறள் திருக்குறள்” என்ற நூல் வெளியீட்டு விழா.!! ஐயா அவர்களின் அற்புதமான இந்த நூல் குறித்து நயப்புரை செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.!!! 

இனம், மதம், நாடு என்ற பேதங்களைக் கடந்து உலகோர் அனைவருக்கும் பொதுவான வாழ்வியல் அறங்களைத் தந்துநிற்கும் தனித்தன்மை வாய்ந்த நூலாகிய திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருப்பினும், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான வாழ்வியல் நன்நெறிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் இன்றைய நவநாகரிக வளர்ச்சிப்போக்கில், வேறுபட்ட கால, சூழல்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில், உலகின் போக்கினை உள்வாங்கிக்கொண்டு மிகுந்த சமூகப்பொறுப்புடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.!! மிகக் குறிப்பாக இளைஞர்களின் வாழ்வியல் ஈடேற்றத்திற்கு உதவும் வகையிலான குறள்களைத் தெரிவுசெய்து தமிழ் மற்றும் ஆங்கிலம் 

ஆகிய இரு மொழிகளிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

எப்பொழுதுமே மன்னுயிர் ஓம்புகின்ற உன்னத பண்பு நூலாசிரியர் திரு. வி. வின். மகாலிங்கம் ஐயா அவர்களிடம் நிறைந்திருப்பது கண்டு மகிழ்கிறோம்.!!ஐயா அவர்களை நன்றியுடன் வாழ்த்தி வணங்குகிறேன்.!!

இந்த நூல்வெளியீட்டு விழாவினை கனேடிய தமிழர் வலுவளர் அமைப்பு, உலக ஒழுக்க நெறிக் கழகம் இணைந்து  நடாத்தியிருந்தன.. இந்த அமைப்புகள் மிகச் சிறந்த ஆன்ம சேவைகளினைச்  செய்து வருகின்றன. குறிப்பாக, சிறப்புக் குழந்தைகளுக்கான மிக உயரிய  சேவைகளினை உலகளவிற் செய்துவருகின்ற இந்த அமைப்புகளின் தொண்டுகள் வணக்கத்திற்குரியன.

அன்புடன்,
ஜோதி ஜெயக்குமார்

Leave a Reply