• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…

சினிமா

ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவர். அவர்கள் சொல்வதை அச்சு பிசிராமல் கேட்பாராம். அப்படி தனக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்தவரின் பேச்சை கேட்டு ஒரு காதலையே புதைத்து கொண்ட சம்பவம் எல்லாம் நடந்து இருக்கிறது.

1979ம் ஆண்டு தர்மயுத்தம் படத்தின் ஷூட்டிங் ஒரு தனியார் ரெசிடென்சியில் நடந்து இருக்கிறது. அந்த இடத்தின் உரிமையாளர் ரெஜினா வின்சென்ட். ரஜினிகாந்த் அப்போது நிறைய மன உளைச்சலில் இருக்க ரெஜினாவை கண்டதும் அவருக்கு ஒரு இனம் புரியாத பாசம் வந்ததாம். உடனே தன் அம்மா போல அவரிடம் நட்பு கொள்ளத் தொடங்கினார். 

அவர் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பாராம். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் ஒரு நடிகை மீது ரஜினிக்கு தீவிர காதல் இருந்ததாம். ஆனால் அந்த நடிகைக்கு இந்த காதல் குறித்து தெரியாதாம். காதலை சொல்லலாம் என ரஜினி முடிவெடுக்கிறார்.

நகையை வாங்கிக்கொண்டு முதலில் ரெஜினா வின்சென்ட்டை பார்த்து விஷயத்தினை சொன்னாராம். சொல்லிட்டியா எனக் கேட்க ரஜினி இல்லை என்றாராம். சிறிது நேரம் கழித்து ரஜினியிடம், உனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமல் போனால் அதை உன்னால் ஏத்துக்க முடியுமா? இருவரும் ஒரே துறையில் இருப்பவர்கள். நாளைக்கு நீ போய் அவளிடம் சம்மதம் கேட்டு, அவள் மறுத்துவிட்டாள்.

பின்னர் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவள் சங்கடப்படுவா? உனக்கும் அது கஷ்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். இது தேவையா? அதனால் அவளாக நீ அவள் மனதில் இருந்தால் சொல்லுவாள். அதுவரை அமைதியாக இரு என்றாராம். அதை கேட்ட ரஜினி அவர் சொன்னது போல அமைதியாக விட்டாராம். மறுபடியும் அதைப் பற்றி பேசி கொள்ளவே இல்லையாம். அதனுடன் அந்த நடிகையிடம் காதலை சொல்லவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply