• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் யானை ஒன்று சடலமாக கண்டெடுப்பு - காணி உரிமையாளர் கைது

இலங்கை

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் நேற்றையதினம் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply