• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி

இலங்கை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply