• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை 

இலங்கை

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழில் நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று (09.02.2024) நடைபெற்றுள்ளது.

இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் ரசிகர்களை சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு நிகழ்ச்சியின் இடைநடுவில் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Reply