• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலன் சுவாமி விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் அரியநேத்திரன்

இலங்கை

வேலன் சுவாமியிடம் பிரதேசவாத ரீதியில் நடந்து கொண்டமை தவறானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் போராட்டத்துடன் ஒன்றித்து செயற்படுபவரான வேலன் சுவாமிகளுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கை தமிழரசுக்கட்சி மதவாதமோ, சாதிவாதமோ, இனவாதமோ அற்ற கட்சியாகவே இருக்கும்.

நாங்கள் வேலன் சுவாமிக்கு மேற்கொண்ட செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இதனை தெரிவிக்கின்றோம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply