• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 7 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

இலங்கை

யாழ், கொக்குவில் பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 20,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களால் ,டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply