• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசேட சுற்றிவளைப்பில் 703 சந்தேக நபர்கள் கைது

இலங்கை

பொலிஸாரின் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 178 சந்தேக நபர்களும் அடங்குவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 525 பேரில் போதைப்பொருளுக்கு அடிமையான 6 பேர், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் விளக்கமறியல் உத்தரவின்படி, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ் மற்றும் 447 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply